×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மார்ச் 30-ஆம் தேதிவரை தமிழகத்தில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

மார்ச் 30-ஆம் தேதிவரை தமிழகத்தில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கையை தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "தென்னிந்திய பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு கிழக்குதிசை காற்று, மேற்குதிசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக 26-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-ஆம் தேதி முதல் 30-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம். 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒரு சில பகுதியில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu news #chennai meotrological centre #Rain update #சென்னை வானிலை ஆய்வு மையம் #Latest news #Rain news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story