சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை! மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!
rain in tamilnadu
தமிழகத்தில் வெகுநாட்களாக நல்ல மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். சில மாவட்டங்களில் மழையே பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிதண்ணீருக்கே கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வந்தது. சென்னையில் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் விடியவிடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனால் நகர் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
சென்னையில் வடசென்னை பகுதிகளில் நள்ளிரவு முதல் விடியவிடிய மழை பெய்தது. கிண்டி, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் போன்ற இடங்களிலும் விடிய விடிய மழை பெய்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362