×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் வெளுத்துவாங்கவிருக்கும் மழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நே

Advertisement


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அந்த அளவிற்கு சுட்டெரிக்கும் வெயிலினால் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும், நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடஉள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் கன் னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை யும் பெய்யும் எனவும், 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங் களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்எனவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story