×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த இரண்டு நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

rain in tamilnadu

Advertisement


தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை இல்லாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். சில மாவட்டங்களில் மழையே பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வந்தது.

தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணியில் இருந்து சென்னையில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி,  அடையாறு, வட‌ழனி, கோயம்பேடு, குரோம்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.

இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain in tamilnadu #weather report
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story