வெயிலினால் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலினால் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362