×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.! உச்சகட்ட சந்தோஷத்தில் விவசாயிகள்.!

புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

Advertisement

தமிழகத்தில் அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதக்கியது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல் தருமபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story