×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை! எந்த மாவட்டங்களில் தெரியுமா?

rain in tamilnadu

Advertisement

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதன் காரணமாகவும், தென்மேற்கு பருவமழையின் காரணமாகவும் தமிழக மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான், கேரளா - கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு மற்றும் மகாராஷ்டிரா, கோவா, அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story