இன்று தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
rain in tamilnadu

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். சில மாவட்டங்களில் மழையே பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வந்தது.
தற்போது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வரமாக சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தது. இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தமிழகத்தில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.