சென்னையில் பகல்பொழுதில் சுட்டெரித்த வெயில்.! யாருக்கும் தெரியாமல் கொட்டித்தீர்த்த கனமழை.!
சென்னையில் நேற்று பகல்பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று இரவு முதல் கனமழை பெய்த
சென்னையில் நேற்று பகல்பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கோயம்பேடு, கிண்டி, நங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தமிழகத்தின் பல இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சாரல் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது.
சென்னையில், திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில வாரங்களாக சென்னையில் வெயில் வெளுத்து வந்த நிலையில் நள்ளிரவில் சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் தற்போது வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362