சென்னையில் 5 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்க்கும் கனமழை! வீட்டிற்குள்ளே முடங்கிய மக்கள்!
rain in chennai
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்தநிலையில் இன்று சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த மழையானது இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த மழையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 22ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், ஜூலை 20, 21 தேதிகளில் தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362