×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigAlert: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. உங்க மாவட்டமும் இருக்கா பாருங்க?.. லிஸ்ட் இதோ..!!

#BigAlert: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. உங்க மாவட்டமும் இருக்கா?.. லிஸ்ட் இதோ..!!

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகபட்சமாக நேற்று மதுரை விமான நிலையத்தில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பொருத்தமட்டில், தெற்கு வங்க கடல் பகுதியின் மேல்நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு சேர்ந்து 1-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

2-ஆம் தேதியை பொருத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

3-ஆம் தேதியை பொருத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

4-ஆம் தேதியை பொருத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் கனமழை முதல் கனமழையும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

5-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் அடுத்த 24 மணிநேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 1-ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரி கடல் பகுதி, இலங்கை கடலோரப் பகுதி, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும் இடையிலேயே 55 கிலோமீட்டர் வரையிலும் வேகமும் இருக்க கூடும். 

இதனால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அதேபோல அரபிக்கடலைப் பொருத்தமட்டில் 1-ஆம் தேதி மற்றும் 2-ஆம் தேதியில் லட்சத்தீவுகள், கேரளா - கர்நாடக கடலோர பகுதியில் சூறாவளிகாற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Rain alert #5 days #chennai #சென்னை வானிலை ஆய்வு மையம் #மழை முன்னறிவிப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story