×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!!

அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!!

Advertisement

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், 26ம் தேதியான இன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், தென்காசி, திருச்சி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக குமரிகடல் பகுதிகள் மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Meotrological centre #tamilnadu #Rainfall
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story