×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் கர்ப்பம்.! அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.! இறுதியில் நேர்ந்த பரிதாபம்.!

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண்ணிற்கும், பொள்ளாச்சியை

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண்ணிற்கும், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் ராணி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்தநிலையில் திடீரென ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள்  ராணியை பரிசோதனை செய்ததில் அவர் மீண்டும் கருத்தரித்து உள்ளதாக கூறியுள்ளனர். இதை கேட்டு ராணியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மீண்டும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ராணி அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார். மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் ராணி இறந்து விட்டார் என கூறி அவரது உடலை வாங்க ராணியின் உறவினர்கள் மறுத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்  புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pregnant women #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story