×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொந்த மகளை மிரட்டி சீரழித்து, 7 மாத கர்ப்பமாக்கிய காமுக தந்தை.. பேரதிர்ச்சி சம்பவம்.. பெரும் துயரம்.! 

சொந்த மகளை மிரட்டி சீரழித்து, 7 மாத கர்ப்பமாக்கிய காமுக தந்தை.. பேரதிர்ச்சி சம்பவம்.. பெரும் துயரம்.! 

Advertisement

15 வயது மகளை மிரட்டி கற்பழித்து, 7 மாத கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, பத்துதாக்கை கிராமத்தில் வசித்து வருபவர் சேகர் (வயது 55). இவருக்கு மனைவி மற்றும் 15 வயதுடைய மகள் இருக்கிறார். வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு, மனைவியின் பணத்தை மிரட்டி வாங்கி மதுவை அருந்திவந்த சேகர், மகள் வீட்டில் தனியாக இருக்கும் போது மிரட்டி பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார். 

மேலும், இதனை வெளியே கூறினால் உன்னையும், தாயையும் கொலை செய்திடுவேன் என்று மிரட்டவே, பயந்துபோன சிறுமியும் கொடூரத்தை வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிய சேகர், தொடர்ந்து மகளிடம் அத்துமீறி இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளிக்கவே, புகாரை ஏற்று போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudukkottai #father #Minor Girl #sexual abuse #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story