×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 வயது மகளுடன் கூலித்தொழிலாளி குளத்தில் குதித்து தற்கொலை; ஜாமினில் வெளியே வந்த தந்தை எடுத்த முடிவால் சோகம்.!

5 வயது மகளுடன் கூலித்தொழிலாளி குளத்தில் குதித்து தற்கொலை; ஜாமினில் வெளியே வந்த தந்தை எடுத்த முடிவால் சோகம்.!

Advertisement

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், கட்டக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது 34). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பால்ராஜின் மனைவி பிரியா (வயது 30). தம்பதிகளுக்கு 7 வயதுடைய மகன், 5 வயதுடைய மகள் இருக்கின்றனர். 

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரியா விராலிமலை, வில்லாருடை கிராமத்தில் இருக்கும் தாயின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 15ம் தேதி மனைவிக்கு தொடர்பு கொண்ட ராஜ், குழந்தைகள் உன்னை பார்க்க விரும்புகின்றன என கூறியுள்ளார். 

மேலும், விராலிமலை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேரில் வந்த ப்ரியாவை பால்ராஜ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். விராலிமலை காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புதுக்கோட்டை சிறையில் இருந்த பால்ராஜ், 5 நாட்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். நேற்று அதிகாலை நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மகள் நிதர்சனவுடன் அங்குள்ள தர்மகுளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudukkottai #Annavasal #suicide #புதுக்கோட்டை #தற்கொலை #தந்தை மகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story