×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுச்சேரி சிறுமி கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

புதுச்சேரி சிறுமி கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Advertisement

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த நாராயணன் என்பவரின் 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து சிறுமியின் உடல் அம்பேத்கர் நகர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் 59 வயதான விவேகானந்தன் ஆகிய இருவரையும் போலீசார் பிரித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சிறுமியை கொன்றது தாங்கள்தான் என அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போது சிறுமி உயிரிழந்துவிட்டதாகவும், இதனையடுத்து சிறுமியை சாக்கு பையில் கட்டி கால்வாயில் வீசியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#puducherry #harassment #killed #Murder #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story