×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் எச்.ராஜா பிரசாரத்தின் போது அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து!

problem in election canvas

Advertisement


புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஆலங்குடி அருகே மாஞ்சான் விடுதி கிராமத்தில்  சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா  பிரச்சாரத்திற்கு வந்துள்ளார்.

அங்கு எச்.ராஜா வந்ததை அடுத்து ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அங்கு நீண்ட நேரம் மக்கள் முன் பேசிய எச்.ராஜாவிற்கு ஏரளமான ஆதரவுகள் குவிந்தது. இதன் பிரச்சாரம் முடிந்ததும் அனைவரும் களைந்து சென்றனர்.  பிரச்சாரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மாஞ்சான்விடுதி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.  கட்சியை சேர்ந்த ரவி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து சின்னத்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#h raja #canvas
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story