காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கைதி..!! கோவையில் பரபரப்பு சம்பவம்..!!
காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கைதி..!! கோவையில் பரபரப்பு சம்பவம்..!!
கோவை காட்டுமடம் பகுதியில் ரவுடி காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் ஆயுத வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ரவுடி காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு உண்டானது. காவல்துறையினரை நோக்கி சுட்ட கைதி சஞ்செய் ராஜாவை, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயன்ற போது அதை எடுத்து காவல் துறையினரை கைதி சஞ்சய் ராஜ் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. கோவை காட்டு மடம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சஞ்சய் ராஜை சுட்டதில் முட்டியில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362