புழல் சிறை அருகே பரபரப்பு.! ஒரு நிமிஷம் சார்... காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்த கைதி... தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
புழல் சிறை அருகே பரபரப்பு.! ஒரு நிமிஷம் சார்... காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்த கைதி... தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
சென்னை புழல் சிறை அருகே கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கைதியை தப்ப விட்ட இரண்டு காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(26). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழிப்பறி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.