#Breaking: தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி?.. அழைப்பு விடுத்த பாஜக.. காரணம் இதுதான்.!
#Breaking: தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி?.. அழைப்பு விடுத்த பாஜக.. காரணம் இதுதான்.!
முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமரை நேரில் வர வேண்டி தமிழ்நாடு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் தமிழக அரசியல்கட்சி தலைவர்கள் பலரும் பசும்பொன்னுக்கு நேரில் சென்று வருவார்கள்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா அக். மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகைதர தமிழ்நாடு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குருபூஜைக்கு தமிழகம் வந்தால், அவ்வழியே இராமேஸ்வரம் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமரின் தமிழக வருகை, அவரின் அலுவலகத்தால் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362