×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விலை உயர்வு எதிரொலி....!! ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வருகிறது...!!

விலை உயர்வு எதிரொலி....!! ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வருகிறது...!!

Advertisement

சென்னையில் மட்டும் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

தக்காளி விலை உயர்வை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்;

சென்னையில், நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் தக்காளி மற்ற மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும். மேலும் நியாய விலை கடைகளில் விற்கப்படும் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் செய்வதை அதிகரிதிருக்கிறோம். மேலும் பத்து நாட்களுக்கு தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளிடம் இருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

ஒவ்வொரு வருடமும் இதேபோல் தக்காளி விலை அதிகரிக்கிறது. எனவே அடுத்த வருடம் தக்காளி விலை அதிகரிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Tomatoes #Sale in Ration Shops
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story