×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை.! தக்க நேரத்தில் சிறப்பாக செயலாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.! குவிந்துவரும் பாராட்டு.!

புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை.! தக்க நேரத்தில் சிறப்பாக செயலாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.! குவிந்துவரும் பாராட்டு.!

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ் என்பவரின் மனைவி பவித்ரா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தனையடுத்து அவரது உறவினர்கள் அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புதுக்கோட்டை ராணியர் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பவித்ராவை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டை ராணியர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லும் வழியில் பவித்ராவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

அப்போது 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சாலையோரமாக ஆம்புலன்ஸை நிறுத்தி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். அதில் சுகப்பிரசவமாக பவித்ராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும், சேயும் புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரியான நேரத்தில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பவித்ராவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pregnant women #108 ambulance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story