மனைவியின் திருமணத்துக்கு முந்தைய ரகசியத்தை கண்டுபிடித்த கணவன்.! 7 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கமல் பிரசாத். விவசாயியான இவர
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கமல் பிரசாத். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகி என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்தநிலையில் செல்வநாயகி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
செல்வநாயகி திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். மகளின் காதல் விஷயத்தை அறிந்த அவரது பெற்றோர் அவசர அவசரமாக கமல்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வநாயகியின் காதல் குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவர் கமல்பிரசாத்திற்கு தெரிய வந்துள்ளது.
அதைதொடர்ந்து தனது மனைவியிடம், திருமணத்துக்கு முன் காதல் விவகாரத்தை கூறி இருக்கலாமே என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது காதல் விஷயம் கணவருக்கு தெரிய வந்ததால் மனவேதனை அடைந்த செல்வநாயகி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி உயிரிழந்ததை அறிந்த கமல்பிரசாத் விஷம் குடித்து விட்டு காரில் வேகமாக சென்று ஒரு லாரியில் மோதி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கமல்பிரசாத், கோபியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். செல்வநாயகிக்கு திருமணம் நடந்து ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362