கோவிலுக்கு சென்ற பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!
poosari abused school girl
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சில மாதங்களாக வயிற்று வலி என வீட்டில் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு இறந்த நிலையில் 6 மாத சிசு பிறந்ததாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட மாணவி, அடிக்கடி கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்லும்போது அங்கு பூஜை செய்யும் 48 வயதான ராஜ் என்ற பூசாரி மாணவியை கொடுமை படுத்தியுள்ளான்.
மாணவியை கவரும் வழியில் பேசி அருகில் உள்ள பூசாரியின் வீட்டிற்கு, யாரும் இல்லாத நேரத்தில் அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பற்றி வெளியில் சொன்னால் படிப்பு கெட்டுப் போய்விடும் என்று பூசாரி மிரட்டி அனுப்பியதாகவும், இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து பூசாரி ராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362