×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீடி பற்றவைத்தபோது பயங்கரம்.. உடலில் தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி.. பீடி பிரியர்களே உஷார்.!

பீடி பற்றவைத்தபோது பயங்கரம்.. உடலில் தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி.. பீடி பிரியர்களே உஷார்.!

Advertisement

வீட்டில் பீடி பற்றவைத்து பிடித்த முதியவர் உடலில் தீப்பற்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகபுரம், வடக்கு பாரதிபுரம் வீதியில் வசித்து வருபவர் வடிவேல் (வயது 80). இவரின் மனைவி இறந்துவிட்டார். இதனால் வடிவேல் தனிமையில் வசித்து வருகிறார். 

இவருக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை மருமகள் கலா & பேரன் விஜயகாந்த் ஆகியோர் கவனித்து வந்துள்ளனர். பீடி புகைக்கும் பழக்கம் கொண்ட வடிவேல், எப்போதும் பீடி குடித்தவாறே இருப்பார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் பீடி பற்றவைத்து வடிவேலுவின் மீது தீக்குச்சி விழுந்துள்ளது. அது உடையிலும் பிடித்துக்கொள்ளவே, தீ மளமளவென பரவியுள்ளது. இதனால் அவர் அலறித்துடித்த நிலையில், தகவல் மருமகளுக்கு சென்றுள்ளது. 

இதனையடுத்து, விரைந்து வந்த கலா மற்றும் விஜயகாந்த் வடிவேலுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த வடிவேல், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கோரிமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pondicherry #death #fire accident #Smoking Habit #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story