×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Breaking#:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Pollachi rape case to cbcid

Advertisement

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று காலை உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இவர்களால் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், மருத்துவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என பல தரப்பு பெண்கள் பாதிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அரசியல் கட்சிகள் தொடர் வலியுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உத்தரவில் சதீஷ், வசந்த் குமார், சபரிராஜன் இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை கோவை மாவட்ட காவல்துறை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதன்படி, இன்று ஆட்சியர் ராசாமணி வெளியிட்ட உத்தரவில் பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pollachi #Pollachi Rapists #Cbcid
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story