காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காவலர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன..?
policemen shooted his lover
விழுப்புரம் அருகே அன்னியூரில் தனது காதலியை பிறந்தநாளன்று சந்திக்கச் சென்ற காவலர் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்வேல் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரான செஞ்சியில் சரஸ்வதி என்ற கல்லூரி மனைவியை காதலித்து வந்துள்ளார். சரஸ்வதி மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
சரஸ்வதியின் பிறந்த நாளான இன்று தனது காதலியை சந்திக்க கார்திக்வேல் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவர்கள் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் இன்று காலை சந்தித்துள்ளனர்.
அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கார்த்திக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியின் தலையில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் மேலும் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணி என்ன.. கார்திக்வேல் சரஸ்வதியை ஏன் சுட்டுக்கொன்றார் என்ற காரணத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் அன்னியூரைச்சேர்ந்த சரஸ்வதியை காதலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.