×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கதவை மூடி கொண்டு போலீஸ்காரர் மனைவி எடுத்த விபரீத முடிவு.! தாய் கூறும் அதிர்ச்சி காரணம்.!

நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்

Advertisement

நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்தவருடம் நாகராஜனுக்கும், ஷிவானி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இதனையடுத்து நாகராஜன் தன்னுடைய தந்தை வீட்டின் அருகில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட உட்கார்ந்ததாகவும், அப்போது ஷிவானியின் சமையல் பிடிக்கவில்லை என்று மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாகராஜன் பணிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இதனையடுத்து ஷிவானி தன் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டதாகவும், வெகு நேரம் வெளியே வராததால் நாகராஜன் குடும்பத்தினர் ஷிவானி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஷிவானியின் குடும்பத்தினர் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஷிவானி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் ஷிவானியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஷிவானியை பரிசோதித்த மருத்துவர்கள் ஷிவானி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஷிவானியின் தாயார்,  6 மாதங்களுக்கு முன் தான் ஷிவானி கர்ப்பம் அடைந்தார். ஆனால் திடீரென்று கரு கலைந்து விட்டது. அதற்கு என் மகள் தான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் குற்றம் சாட்டி பேசி, கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தான் எங்கள் மகள் இறந்துள்ளார் என புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #police wife
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story