துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்.! போலீஸ் அதிகாரி செய்த மோசமான செயல்.!
துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் போக்ச
துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சதீஷ் குமார் என்பவர் சென்னை மணலி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது, ரேஷன் கடையில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சதீஷ்குமாருக்கு அந்தப் பெண்ணின் 15 வயது மகள் மீதும் ஆசைப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியையும் சீரழிக்க முயற்சி செய்துள்ளார் சதீஷ்குமார். இவரின் செயலுக்கு அந்த சிறுமியின் தாய் ரேவதி மற்றும் பெரியம்மா நீலாவதி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். சதீஷ்குமாரின் ஆசைக்கு இணங்காத அந்த சிறுமியை சதீஷ்குமார் துப்பாக்கியால் மிரட்டி பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிறுமிக்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் நடந்த விஷயத்தை சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல், போக்சோ உள்ளிட்ட சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ரேவதி மற்றும் பெரியம்மா நீலாவதி ஆகியோரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362