×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்டி பண்ணிட்டீங்களே சார்.... வீட்டில் தனியாக இருந்த பெண் போலீஸிடம் அத்து மீறிய ஏட்டு.!!

இப்டி பண்ணிட்டீங்களே சார்.... வீட்டில் தனியாக இருந்த பெண் போலீஸிடம் அத்து மீறிய ஏட்டு.!!

Advertisement

ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியை சேர்ந்த 32 வயது நிரம்பிய செல்வன் என்பவர் சேலம் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளரின் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். செல்வனின் மனைவியும் ஈரோடு ரயில்வே போலீசாக பணியாற்றி வந்துள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு செல்வன் ஈரோட்டுக்கு அடிக்கடி சென்றுவருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்தநிலையில், ஈரோட்டில் வசிக்கும் 29 வயதான ஒரு பெண் போலீசுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண் போலீஸ் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு செல்வன் அந்த பெண் போலீஸ் வீட்டுக்கு சென்று, அங்கு தனியாக இருந்த அவரை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து செல்வன் அங்கிருந்து தபோயோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீஸ் கொடுத்த புகாரின்பேரில் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#police #arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story