×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலையில் வலிப்பு..! ஆனாலும் மாலையில் மீண்டும் பணிக்கு வந்த காவலர் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழப்பு..!

Police man dead for heart attack on duty near salem

Advertisement

காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலார்களை சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்துள்ளார் ஆயுதப்படை வாகன பிரிவு தலைமை ஓட்டுநர் சுந்தர்(47). நேற்று இரவு நடந்த இந்த பணியின்போது சுந்தர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, சுந்தர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சக போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், சம்பவத்தன்று காலையில் சுந்தர் வலிப்பி வந்து மயங்கி விழுந்ததாகவும், இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற அவர் மீண்டும் மாலையில் வேலைக்கு வந்தநிலையில்  இரவு மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#heart attack #Police dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story