×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மாணவன் வெட்டிக்கொலை.. கொலைக்கான காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!

பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மாணவன் வெட்டிக்கொலை.. கொலைக்கான காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!

Advertisement

பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன், வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகாமையில் கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி. இவரது மகன் கோகுல் (வயது 16). இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்றிரவு கோகுலுடன் படிக்கும் மாணவர் ஒருவர், பிறந்தநாள் பார்ட்டிக்கு கோகுலை அழைத்து செல்வதாக கூறி 7 மணிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், இரவு முழுவதும் கோகுல் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அதிகாலைவேளையில் திருக்கோவிலூர் அருகாமையில் கை மற்றும் கழுத்துப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவரது சடலம் கிடைக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.மேலும், அங்கிருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், இறந்தது கோகுல் என தெரியவந்தது. பின் இந்த சம்பவம் தொடர்பாக கோகுலின் பெற்றோர் மற்றும் கோகுலை அழைத்து சென்ற மாணவனை விசாரித்த நிலையில், கொலைக்கான காரணம் தெரியாததால் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#police #Investigation #student #dead #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story