×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டைல்ஸ் தொழிலாளி அடித்து கொன்று புதைப்பு.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்துபோன உரிமையாளர்..!

டைல்ஸ் தொழிலாளி அடித்து கொன்று புதைப்பு.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்துபோன உரிமையாளர்..!

Advertisement

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் டைல்ஸ் போடும் வேலைக்கு வந்த வடமாநில இளைஞரை ஒருவர் கொலைசெய்து வீட்டிற்குள் புதைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகாமையில் பு.மாம்பாக்கத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் என்ற இளைஞர் ரமேஷ் என்பவருக்கு கட்டி வரும் புதிய கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது கடந்த 6ஆம் தேதி டைல்ஸ் பதிப்பதற்காக பவன்குமாருடன் வந்த இளைஞர் வேலை முடிந்ததும் சொந்த ஊருக்கு புறப்பட்ட நிலையில், மற்றொரு இளைஞர் திடீரென தலைமறைவாகி இருக்கிறார்.

இதற்கிடையில், வேலை முடிந்ததும் பவன்குமார் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவரை தொடர்பு கொண்டபோது, செல்போன் அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக பு.மாம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, பவன்குமார் அங்கு இல்லாததால் அவர் டைல்ஸ் வெலைப்பார்க்க சென்ற வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர் சோனாசைனி வீட்டில் தேடிப்பார்த்தபோது வீட்டின் முகப்பு பகுதியில் பவன்குமாரின் உடைகள் இரத்தக் கறையுடன் கிடந்துள்ளது. இதனால் உடனடியாக காவல்துறையில் தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டிப் பார்த்துள்ளனர்.

அங்கு பலத்த காயங்களுடன் பவன்குமாரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடந்து வந்த நிலையில், பவன்குமாருடன் வேலைக்கு வந்த மற்றொரு நபர் தலைமறைவாகியதால் அவர் மீது சந்தேகம் எழுந்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kallakurichi #boy #Murder #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story