×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருச்சியில் போதை பொருள் விற்பனை... 2 பெண்கள் கைது.!! காவல்துறை அதிரடி.!!

திருச்சியில் போதை பொருள் விற்பனை... 2 பெண்கள் கைது.!! காவல்துறை அதிரடி.!!

Advertisement

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பிரபலமான நத்தர்ஷா பள்ளிவாசல் தர்கா அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிரமான சோதனையையும் நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பெண்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த 2 பெண்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த 2 பெண்களும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த கதீஜா மற்றும் சம்சு நிஷா என தெரிய வந்திருக்கிறது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... அள்ள அள்ள போதை மாத்திரைகள்.!! ஒருவர் கைது.!!

மேலும் உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாட்ஷா என்ற நபரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா.? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... கட்டுகட்டாக பணம், போதை மாத்திரைகள்.!! 7 பேர் கும்பல் கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #tiruchirapalli #Crime #Cannabis Salws #Two Women Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story