×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு மதுபானக்கடையில் ஓட்டை போட்டு திருட்டு முயற்சி... கட்டிட மேஸ்திரி கைது‌.!

அரசு மதுபானக்கடையில் ஓட்டை போட்டு திருட்டு முயற்சி... கட்டிட மேஸ்திரி கைது‌.!

Advertisement

டாஸ்மாக் கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம், அருகிலிருந்த மருத்துவ ஊர்தி ஓட்டுநர் ஒருவருக்கு ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் மெதுவாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மர்ம நபர் டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றில் துளையிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் உடனடியாக பள்ளபட்டி காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரை மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரது பெயர் மோகன் என்பதும், அவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.தொடர்ந்து இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில், தற்போது டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்களை திருட நினைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #men #arrest #police #tasmac
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story