அரசு மதுபானக்கடையில் ஓட்டை போட்டு திருட்டு முயற்சி... கட்டிட மேஸ்திரி கைது.!
அரசு மதுபானக்கடையில் ஓட்டை போட்டு திருட்டு முயற்சி... கட்டிட மேஸ்திரி கைது.!
டாஸ்மாக் கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம், அருகிலிருந்த மருத்துவ ஊர்தி ஓட்டுநர் ஒருவருக்கு ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் மெதுவாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மர்ம நபர் டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றில் துளையிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் உடனடியாக பள்ளபட்டி காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரை மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரது பெயர் மோகன் என்பதும், அவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362