தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!

பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா... இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!

police-arrested-a-30-year-old-man-for-sexually-abusing Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ட்ரெயினுக்கு காத்திருந்த பெண் ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தப்பிச் சென்றிருக்கிறார்.

tamilnadu

கைது செய்யப்பட்ட நபர்

இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் திருத்தணியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற 30 வயது நபரை கைது செய்தனர். மேலும் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர். 

இதையும் படிங்க: விடுமுறையில் வழிபறி... "பாட்டியிடம் கைவரிசை காட்டிய ராணுவ வீரர்..." மடக்கி பிடித்த மக்கள்.!!

சக பயணிகள் அதிர்ச்சி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் சக பயணிகளிடம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பொது இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண் பயணிகளை மனதளவில் பாதிப்பதாக அமைந்திருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "அதிமுக - பாஜக கூட்டணி ஒரு போதும் வெற்றிபெறாது..." தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #arakkonam #Crime #sexual abuse #Crime Against Women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story