×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்த இளைஞர்!. போலீசாரின் அதிரடி நடவடிக்கை!.

ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்த இளைஞர்!. போலீசாரின் அதிரடி நடவடிக்கை!.

Advertisement


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சூரியகிருஷ்ணன் என்பவர்  ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த போது, அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

 சூரியகிருஷ்ணன் அவரது கல்லூரி படிப்பு முடிந்ததும் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். தற்போது அந்த மாணவி அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் அந்த மாணவி காதலன் சூரியகிருஷ்ணனை பார்க்க அடிக்கடி கோவைக்கு சென்றுவந்துள்ளார்.

அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் அவர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திருமணம் செய்ய கோரி அந்த மாணவி வற்புறுத்தியதற்கு, தனது சகோதரி திருமணத்திற்கு பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மழுப்பியுள்ளார்.

மேலும் அந்த மாணவி அவரிடம் பேசும்போது சூரியகிருஷ்ணன் பின்வாங்கியுள்ளார், தன்னை வெறுக்கிறார் என்பதை உணர்ந்த அந்த மாணவி காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அவரை பல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சூரியகிருஷ்ணனை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#college girl #cheating #police arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story