வெளியே மசாஜ் சென்டர், உள்ளே விபச்சாரம்!. காவல்துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய புரோக்கர்கள்!.
வெளியே மசாஜ் சென்டர், உள்ளே விபச்சாரம்!. காவல்துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய புரோக்கர்கள்!.
தற்போது மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னையில் எண்ணற்ற மசாஜ் சென்டர்கள் உள்ளன.
இதேபோல் மதுரையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வாசுகி நகர் 3 வது தெருவில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர்.
மேலும் பெண்களை வைத்து விபச்சாரத்திற்க்கு உட்படுத்திய புரோக்கர்கள் நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கு நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362