செப்-3: ஓய்வின்றி உயரும் பெட்ரோல் டீசல் விலை!! இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!!
பெட்ரோல் டீசல் விலை விண்ணை தொடும் உச்சம்..!! கிடு கிடு உயர்வு..!!
தொடர் உயர்வில் இருந்த பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.82.24ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 42 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.77ஆகவும் உள்ளன.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இப்படி விலை உயர்ந்து கொண்டே போனால் நாம் வாகனம் ஓட்டுவதையே நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலை வரும் என அனைவரும் அச்சமடைகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362