×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தாறுமாறாக எகிறிய பெட்ரோல் விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல்

Advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. 

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையிலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று காலை சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.95.28-க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.89.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை உச்சகட்ட உயர்வால் வாகன ஓட்டிகள் வேதனையடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#petrol #price #increased
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story