×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொத்து விவகாரத்தில் பயங்கரம்; இருதரப்பு வாக்குவாதத்தில் ஒருவர் அடித்தே கொலை.!

சொத்து விவகாரத்தில் பயங்கரம்; இருதரப்பு வாக்குவாதத்தில் ஒருவர் அடித்தே கொலை.!

Advertisement

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி. களத்தூர், பாண்டகப்படி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இதே ஊரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவ்விவகாரம் தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ராமையா- கலியமூர்த்தி இடையே மீண்டும் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க, ஆத்திரமடைந்த ராமையா கலியமூர்த்தியை அங்கிருந்த கட்டையால் தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் கலியமூர்த்தியின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் காவல் துறையினர், கலியமூர்த்தியின் உடலை மேஈட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #V Kalathur #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story