கல்லூரிக்கு சரிவர சொல்லாததை கண்டித்ததால் விபரீதம்.. கல்லூரி மாணவனின் முடிவால் சோகம்.!
கல்லூரிக்கு சரிவர சொல்லாததை கண்டித்ததால் விபரீதம்.. கல்லூரி மாணவனின் முடிவால் சோகம்.!
கல்லூரிக்கு சரியாக செல்லாத மாணவனை, பெற்றோர் கண்டித்ததால் மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகாமையில் கீழப்பெரம்பலூர் கிராமம் பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மகன் சதீஷ் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
தொடர்ந்து சதீஷ் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மிகவும் மன உளைச்சல் அடைந்த சதீஷ் தனிமையில் இருந்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார்.
பின் இது குறித்து உறவினர்களுக்கு தெரிய வர அவரை மீட்டு உடனடியாக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர. அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவர, சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் மாணவரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362