×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாட்டுக்கு புல் அறுக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்; அறுந்து கிடந்த மின்கம்பியால் சோகம்.!

மாட்டுக்கு புல் அறுக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்; அறுந்து கிடந்த மின்கம்பியால் சோகம்.!

Advertisement

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 61).

இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவ்வப்போது அவைகளுக்கு புற்களை அறுத்து வந்து வீட்டில் போடுவார். பிற நேரங்களில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். 

இந்நிலையில், இன்று காலை 09:45 மணியளவில் மாட்டிற்கு புல் அறுப்பதற்கு, இராமகிருஷ்ணன் என்பவரின் கிணற்றுப்பகுதி அருகே சென்றுள்ளார். 

அங்கு மின்கம்பி அறுந்து தொங்கிய நிலையில், அதனை காணாது வயரின் மீது கால் வைத்தவர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #death #Electric Attack #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story