குடும்பத்தகராறில் விஷம் குடித்த மனைவி பரிதாப பலி.. சாப்பாடு பரிமாறும் போது சோகம்.!
குடும்பத்தகராறில் விஷம் குடித்த மனைவி பரிதாப பலி.. சாப்பாடு பரிமாறும் போது சோகம்.!
கணவன் - மனைவி சண்டையில் விஷம் குடித்த மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், இராமலிங்கபுரம் கிராமம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரின் மனைவி சந்திரா (வயது 45). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் செல்லப்பாண்டியனுக்கு சந்திரா உணவு பரிமாறிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த சந்திரா அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.
இதனையறிந்த உறவினர்கள், சந்திராவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, சந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக சந்திராவின் உறவினர்கள் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362