×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#பெரம்பலூர்: ஒருதலை காதல் தொல்லையால் பயங்கரம்.. தட்டிக்கேட்ட பெற்றோர் மீது வெடிகுண்டு வீச முயற்சி.. பரபரப்பு சம்பவம்.!

#பெரம்பலூர்: ஒருதலை காதல் தொல்லையால் பயங்கரம்.. தட்டிக்கேட்ட பெற்றோர் மீது வெடிகுண்டு வீச முயற்சி.. பரபரப்பு சம்பவம்.!

Advertisement

14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞரை, சிறுமியின் பெற்றோர் தட்டி கேட்டதால் அவர்கள்மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அருகே கவுள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 24). இவர் அதே பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். 

இதனை பொறுக்க முடியாமல் சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் தனபாலின் வீட்டிற்கு சென்று கண்டித்தனர். அப்போது தனபால், தான் வாஷிங்மெஷினில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து சிறுமியின் பெற்றோர் மீது வீச முயற்சி செய்துள்ளார்.

இதனை தனபாலின் சகோதரர் தடுத்து நிறுத்திய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் மணி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அங்கிருந்த 23 நாட்டு வெடிகுண்டுகளையும் காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், தனபால் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்துள்ளது. 

மேலும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா? அல்லது சமூக விரோத செயல்களுக்காக வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #Love #girl #torture #kavulpalayam #Bomb
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story