×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாலையோரம் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை; பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

சாலையோரம் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை; பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், துறையூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பாலம் அருகே, இன்று பெண் குழந்தையின் சடலம் ஒன்று இருந்தது. 

குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அருகில் சென்று பார்த்தபோது குழந்தை உயிரிழந்து கிடந்ததை உறுதி செய்தனர். 

இதனையடுத்து, காவல் துர்கையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை வீசிச்சென்ற மர்ம நபர்கள் யார்? கொலை செய்யப்பட்டு குழந்தையின் உடல் வீசப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #tamilnadu #baby #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story