தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீன் பிடிக்க புது டெக்னிக்?.. குட்டையில் மின்சாரம் பாய்ச்சிய இளைஞர்கள் பலி.!! 

மீன் பிடிக்க புது டெக்னிக்?.. குட்டையில் மின்சாரம் பாய்ச்சிய இளைஞர்கள் பலி.!! 

perambalur 2 mens died after fishing using new technique that current shock to river Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை காட்டாற்று பகுதியில் தேங்கியிருக்கும் குட்டை நீரில் அப்பகுதி மக்கள் அவ்வப்போது மீன்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று உள்ளூர் இளைஞர்கள் இரண்டு பேர் இரவு நேரத்தில் மீன்பிடிக்க ஆற்றுக்குச் சென்றுள்ளனர். 

மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயற்சி

அப்போது குட்டையில் உள்ள மீனை தூண்டில் போட்டு பிடிக்காமல், மின்சாரம் பாய்ச்சி மீனை பிடிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து மின்வயரை சொருகி நீருக்குள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட நிலையில், நீரின் அருகே இருந்த இளைஞர்களின் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. 

இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 4 பேர் பலி.!!

இருவரும் பலியான சோகம்

இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மறுநாள் காலையில் அவ்வழியாக சென்றவர்கள் இளைஞர்கள் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், சட்டவிரோதமாக இருவரும் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்றது உறுதியானது.

போலீஸ் விசாரணை

இதனை தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வாறான விபரீத முயற்சியை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கிழட்டுக் காமுகன் செய்த கீழ்த்தரமான செயல்.. வெளுத்துவாங்கிய பொதுமக்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Current shock #electricity #Fishing #death #பெரம்பலூர் #Perambalur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story