இரண்டு ஆசிரியர்களை வெளுத்து வாங்கிய மாணவர்களின் பெற்றோர்கள்..! என்ன நடந்தது தெரியுமா?
Parents of students who blew two teachers ..! Do you know what happened?
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை பகுதியில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. அந்த அரசு பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் சேர்ந்து அவர்களது வகுப்பில் உள்ள மாணவர்களை அழைத்து தினமும் தங்களுக்கு மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் இவர்கள் மசாஜ் செய்ய சொல்வது மட்டும் இன்றி அவர்களின் வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்னிலையில் சீட்டு விளையாடுவதும் மற்றும் வகுப்பறையிலேயே தூங்குவதும் என பல தவறான செயல்களை வழக்கமாக கொண்டு செய்து வந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழகத்தையே தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு நல்ல ஆசிரியர் என்றால் தங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் நல்ல கல்வியையும், நல்ல நற்பண்புகளையும் மற்றும் நல்ல ஒழுக்கத்தையும் கற்று கொடுக்க வேண்டும். ஆனால் கற்றுக்கொடுக்க வேண்டிய இவர்களே இது போன்ற கீழ் தனமான செயல்களை செய்து வருகிறார்கள். இன்னும் இவர்களை போன்ற ஒரு சில ஆசிரியர்கள் இருப்பதால் தான் நல்ல நேர்மையான ஆசிரியர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்
இதனை அறிந்த அவர்களது வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் அந்த இரண்டு ஆசிரியர்களை நன்கு திட்டி வெளுத்து வாங்கியுள்ளனர். பின்பு இவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதனை அடுத்து மேலும் சிலர் அந்த ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.