தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பெற்றோர்களும், மாணவர்களும்!!

parents and students happy for government order

parents-and-students-happy-for-government-order Advertisement

 


5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த முடிவுகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

school students

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வந்தது. 

இதற்கு பெற்றோர்கள், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school students #parents #sengottaiyan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story