மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே..! இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்.! ஓபிஎஸ் கோரிக்கை.!
தமிழகத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவி
தமிழகத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் சூழலில், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டிய மாபெரும் பொறுப்பு மின்வாரிய ஊழியர்களிடம் உள்ளது. மேலும், உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளை காக்க மருத்துவர்கள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதற்கு மின்வாரிய ஊழியர்களின் சேவை முக்கியம்.
மழை, புயல் மட்டுமல்ல கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் மகத்தான மக்கள் சேவையாற்றி வருகிறார்கள் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள். அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
இந்தநிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும், முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362